செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு 2 – வது டெஸ்ட்: இந்தியா – இங்கிலாந்து நாளை மோதல்..!

2 – வது டெஸ்ட்: இந்தியா – இங்கிலாந்து நாளை மோதல்..!

2 – வது டெஸ்ட்: இந்தியா – இங்கிலாந்து நாளை மோதல்..! post thumbnail image
லார்ட்ஸ் :- இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி, ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இதில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது. 2–வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நாளை (17–ந் தேதி) தொடங்குகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. முரளி விஜய் முதல் இன்னிங்சில் சதமும், 2–வது இன்னிங்சில் அரை சதமும் அடித்தார். இதே போல் கேப்டன் டோனி, பின்னி, புஜாரா ஆகியோரும் தங்களது பங்களிப்பை அளித்தனர்.

முதல் இன்னிங்சில் புவனேஷ்குமார், முகமது சமி கடைசி விக்கெட்டுக்கு 111 ரன் அடித்து இருந்தனர். பந்து வீச்சில் புவனேஷ்குமார், முகமது சமி, இஷாந்த் சர்மா சிறப்பாகவே செயல்பட்டனர்.

முதல் டெஸ்டில் பந்து எகிறவில்லை. இதனால் பேஸ்ட்மேன்களுக்கு அதிகம் சிரமம் ஏற்படவில்லை. ஆனால், லார்ட்ஜ் மைதானம் அதில் இருந்து வேறுபட்டு இருக்கும்.

இதனால் பேட்டிங்கில் இந்திய அணி கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். முதல் டெஸ்ட்டை போலவே லார்ட்ஸ் டெஸ்டிலும் 5 பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களம் இறங்கும் என்று தெரிகிறது.

இருந்த போதிலும் லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து பந்து வீச்சை எதிர்கொள்வது இந்தியாவுக்கு பெரும் சவாலாகவே இருக்கும். இதை திறம்பட இந்திய பேஸ்ட்மேன்கள் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீராட் கோலி, ஷிகர் தவான் ஆகியோர் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை பேட்டிங், பந்துவீச்சில் சமபலத்துடன் உள்ளது. பேட்டிங்கில் ஜோரூட், ராயசன், பெல், பேலன்னைஸ் ஆகியோர் சிறப்பாக நிலையில் உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி