செய்திகள்,விளையாட்டு காதலியின் நகையை திருடியதாக மரடோனாவுக்கு சம்மன்!…

காதலியின் நகையை திருடியதாக மரடோனாவுக்கு சம்மன்!…

காதலியின் நகையை திருடியதாக மரடோனாவுக்கு சம்மன்!… post thumbnail image
துபாய்:-அர்ஜென்டினாவின் முன்னாள் கால்பந்து வீரர் டிகோ மரடோனா (53). கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் ஆவார்.கால்பந்து விளையாட்டை மேம்படுத்த துபாயில் தூதவராக நியமிக்கப்பட்டார். அதற்காக அவர் கடந்த மாதம் அங்கு சென்று தங்கினார்.

இவருடன் அவரது முன்னாள் காதலி ரோசியோ ஒலிவா (22) என்பவருடன் தங்கியிருந்தார். அப்போது அவரிடம் இருந்த விலை மதிப்புமிக்க கடிகாரங்கள் மற்றும் வைர கம்மல்களை காணவில்லை. அவற்றை மரடோனா திருடியதாக ஒலிவா துபாய் போலீசில் புகார் செய்தார். அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் மரடோனாவுக்கு துபாய் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அதில், அவர் விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு சர்வதேச போலீஸ் உதவியையும் நாடப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி