செய்திகள்,திரையுலகம் லிங்கா படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய சோனாக்ஷி சின்ஹா!…

லிங்கா படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய சோனாக்ஷி சின்ஹா!…

லிங்கா படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய சோனாக்ஷி சின்ஹா!… post thumbnail image
சென்னை:-நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகி வரும் ‘லிங்கா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் ஐதராபாத் நகரில் உள்ள ராமோஜி திரைப்பட நகரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. படத்தில், ரஜினிகாந்தின் ஜோடியாக பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா நடித்து வருகிறார்.

சோனாக்ஷி சின்ஹாவுக்கு இது முதல் தமிழ் படம். 27 வயதான இவர், படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தனது குடும்பத்துடன் ஓய்வை செலவிட உள்ளார். அதனுடன், அர்ஜூன் கபூருடன் நடித்து வரும் தேவர் என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பை தொடரும் எதிர்பார்ப்பிலும் உள்ளார்.இது குறித்து டுவிட்டர் செய்தியில் அவர், ஐதராபாத் படப்பிடிப்பு தளத்தில் லிங்கா படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டு உள்ளன. சில நாட்கள் எனது வீட்டில் ஓய்வெடுக்க உள்ளேன். அதன் பின்னர் தேவர் படத்தில் மீண்டும் நடிக்க வேண்டும். அர்ஜூன்கே26 பாபா தயாராக இருக்கவும் என தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி