செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் நான்காண்டு பட்டப்படிப்பு திட்டத்தை வாபஸ் பெற்றது டெல்லி பல்கலைக்கழகம்!…

நான்காண்டு பட்டப்படிப்பு திட்டத்தை வாபஸ் பெற்றது டெல்லி பல்கலைக்கழகம்!…

நான்காண்டு பட்டப்படிப்பு திட்டத்தை வாபஸ் பெற்றது டெல்லி பல்கலைக்கழகம்!… post thumbnail image
புதுடெல்லி:-டெல்லி பல்கலைக் கழகம் அறிமுகம் செய்துள்ள 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மாணவர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால், பல்கலைக் கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து 4 ஆண்டு பட்டப்படிப்பு திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும், 3 ஆண்டு பட்டப்படிப்பாக மாற்றி மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என்றும் பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டது. இதுதொடர்பாக பல்கலைக் கழக நிலைக்குழு ஆலோசனை நடத்தி வந்தது. புதிய திட்டத்தையும் யு.ஜி.சி.க்கு அனுப்பி வைத்தது.

இந்நிலையில், பல்கலைக் கழக துணைவேந்தர் தினேஷ் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்ச்சைக்குரிய 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு திட்டம் திரும்ப பெறப்படும் என்றும், 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தபடி 3 ஆண்டு இங்கலை பட்டப்படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.இதன்மூலம் கடந்த சில நாட்களாக நீடித்த இழுபறி முடிவுக்கு வந்து விரைவில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி