செய்திகள்,திரையுலகம் தமிழ் நடிகர்கள் பங்கேற்கும் பேட்மிண்டன் போட்டி!…

தமிழ் நடிகர்கள் பங்கேற்கும் பேட்மிண்டன் போட்டி!…

தமிழ் நடிகர்கள் பங்கேற்கும் பேட்மிண்டன் போட்டி!… post thumbnail image
சென்னை:-இந்திய சினிமா உலகைச் சேர்ந்த நடிகர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து ‘நட்சத்திர கிரிக்கெட்’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட கிரிக்கெட் போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இதேபோல், தமிழ் நடிகர்களை ஒன்று திரட்டி, பேட்மிண்டன் போட்டிகளை நடத்த இந்தியன் பேட்மிண்டன் செலிபிரட்டி லீக் என்ற அமைப்பு திட்டமிட்டுள்ளது.

இதில் கலந்து கொள்வதாக தமிழின் முன்னணி நடிகர்கள் பலரும் ஆர்வம் காட்டி, தங்கள் பெயர்களை பதிவு செய்து வருகின்றனர். இதுவரை 50 நடிகர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். அவர்களில், ஆர்யா, பரத், ஜெய், ஜெயம் ரவி, சிவா, ஆரி, தமன், சுந்தர்.சி., எஸ்.பி.பி.சரண், நரேன், ஜான் விஜய், விடிவி கணேஷ், வெங்கட் பிரபு, பிரேம்ஜி, ஆதி, உதய், ராகுல், கிருண்ணா, நடிகைகள் அமலா பால், ஓவியா, ராய் லட்சுமி, ரூபா மஞ்சரி, ஜனனி ஐயர் உள்ளிட்டோர் அடங்குவர். இன்னும் பலர் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பேட்மிண்டன் போட்டிகளுக்கான பயிற்சி வருகிற ஜுலை மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது. நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் இப்போட்டிகளின் தொடக்க விழா ஜுலை 8ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. தொடர்ந்து 9, 10 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடக்கின்றன. இதில், வசூலாகும் நிதியை வைத்து பேட்மிண்டன் வீரர்களின் வளர்ச்சிக்காக செலவிட உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி