செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் ஐ மற்றும் விஸ்வரூபம் 2 வெளிவருவதில் சிக்கல்?…

ஐ மற்றும் விஸ்வரூபம் 2 வெளிவருவதில் சிக்கல்?…

ஐ மற்றும் விஸ்வரூபம் 2 வெளிவருவதில் சிக்கல்?… post thumbnail image
சென்னை:-ஆஸ்கார் பிலிம்ஸ் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ஐ, ஜெயம் ரவி நடிக்கும் பூலோகம், ஜெய் நடிக்கும் திருமணம் எனும் நிக்காஹ் ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. அதோடு, கமல் நடிக்கும் விஸ்வரூபம்-2 படத்தையும் பல கோடி செலவில் தயாரித்து வருகிறது ஆஸ்கார் பிலிம்ஸ்.

இந்நிலையில், ஆஸ்கார் பிலிம்ஸுக்கு பிரபல வங்கி, வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் அடிபடுகிறது. ஐ, விஸ்வரூபம்-2 படங்களின் பேரில் அந்த வங்கியில் பல ஆயிரம் கோடி வாங்கினாராம் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவி. கடன் வாங்கியபோது 2014 ஜனவரியில் விஸ்வரூபம்-2 ரிலீஸ் என்றும், 2014 ஏப்ரலில் ஐ படம் ரிலீஸ் என்றும் சொன்னாராம். அவர் சொன்னபடி இரண்டு படங்களுமே ரிலீஸ் ஆகவில்லை.

எனவே பணத்தை திரும்ப செலுத்தினால் தான் ஐ, விஸ்வரூபம்-2 உட்பட ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கும் படங்களை ரிலீஸ் பண்ண முடியும் என்ற சிக்கல் ஏற்பட்டிருக்கிறதாம். பணத்தை செலுத்தாதவரை மேற்கண்ட படங்களை வெளியிட முடியாதபடி வங்கி தரப்பிலிருந்து தடை ஆணை வாங்கி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி