செய்திகள் சமூக இணையதளத்தில் ஆபாச படம் வெளியானதால் மாணவி தற்கொலை!…

சமூக இணையதளத்தில் ஆபாச படம் வெளியானதால் மாணவி தற்கொலை!…

சமூக இணையதளத்தில் ஆபாச படம் வெளியானதால் மாணவி தற்கொலை!… post thumbnail image
கொல்கத்தா:-கொல்கத்தாவில் உள்ள பர்னாஸ்ரீ பகுதியைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி சமூக இணைய தளத்தில் தனது ஆபாச படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அது உண்மையில் அவர் படம் இல்லை. அவரது படத்தை மார்பிங் முறையில் மாற்றம் செய்து அவரது ஆண் நண்பன் பைசல் இம்ரான்கான் வெளியிட்டுள்ளது அவருக்கு தெரிய வந்தது. அத்துடன் அந்த மாணவியின் போன் நம்பரையும் அதில் குறிப்பிட்டுள்ளான்.

இதனால் அவமானம் அடைந்த அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டாள். தற்கொலை செய்யும் முன் அந்த மாணவி 6 பக்க கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அக்கடிதத்தை போலீசார் கைப்பற்றி, தற்கொலைக்கு காரணமான கைசல் இம்ரான் கான் மற்றும் அவருக்கு உதவிய தீபக் மற்றும் சதீஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி