செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்றார் சீனிவாசன்!…

ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்றார் சீனிவாசன்!…

ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்றார் சீனிவாசன்!… post thumbnail image
புதுடெல்லி:-சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் தலைவராக சீனிவாசன் இன்று பொறுப்பேற்றார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சீனிவாசன் இன்று ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்றார்.

ஐ.பி.எல். போட்டியில் நடைபெற்ற சூதாட்டத்தில் சென்னை அணியின் உரிமையாளரான சீனிவாசனின் மருமகன் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. அவர்மீதான விசாரணை நம்பகத்தன்மையாக நடைபெற சீனிவாசன் இந்திய கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவியை தற்காலிகமாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதனால் அவர் தற்காலிகமாக இந்திய கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.ஐ.சி.சி. தலைவர் போட்டிக்கு சீனிவாசன் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என்று பீகார் கிரிக்கெட் சங்கம் சார்பாக உச்சநீதிமன்றதில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி