அப்போது தனக்கு நெஸ் வாடியா தன்னிடம் அத்து மீறி நடந்ததாக பிரீத்தி ஜிந்தா மும்பையிலுள்ள மெரைன் டிரைவ் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரையடுத்து நெஸ் வாடியா மீது இந்திய தண்டனை சட்டம் 354வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படடிருந்தது. இப்புகார் தொடர்பாக வாடியாவை விசாரித்த போலீசார் அவரை கைது செய்யாமல் இருக்கின்றனர். இதனிடையே புகார் கூறிய ப்ரீத்தியும் வெளிநாடு சென்றிருந்தார்.
வெளிநாடு சென்றிருந்த அவர் நேற்று முன்தினம் மும்பை திரும்பினார். பின்னர் நேற்று வாடியாவின் அத்துமீறல்கள் குறித்த தனது வாக்குமூலத்தை சம்பவம் நடந்த இடமான வான்கடே மைதானத்தில் வழங்கினார். சுமார் இரண்டு மணி நேர விசாரணையில் தன்னிடம் அத்துமீறி நடந்தது குறித்தும், மிரட்டியது பற்றியும் பொறுமையாக வாக்குமூலம் தந்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி