கொழும்பு:-
புதுக்கோட்டையைச் சேர்ந்த 24 மீனவர்கள் கடந்த 18-ம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்தபோது அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இதேபோல் ராமேஸ்வரம், பாம்பனைச் சேர்ந்த 22 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், 24 புதுக்கோட்டை மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்ற நீதிபதி இன்று தீர்ப்பளித்தார். இதேபோல் ராமேஸ்வரம், பாம்பன் மீனவர்கள் 22 பேரை விடுவிக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.
விடுதலை செய்யப்பட்ட 46 தமிழக மீனவர்களும் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் நாடு திரும்புவார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி