இதனை இயக்குனர் விஜய், ஐதராபாத்தில் நடிகை அமலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு போட்டுக் காட்டினார். காரணம் அமலா, விலங்குகளை பாதுகாக்கும் புளூ கிராஸ் அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். தன் கணவர் நாகார்ஜுனாவுடன் இணைந்து படத்தை பார்த்தார் அமலா.
படத்தை பார்த்த அமலா இந்தப் படம் பிற உயிர்கள், குறிப்பாக பிராணிகள் மீது அன்பு செலுத்த வேண்டும் என்பதை என்பதை வலியுறுத்துகிறது. நமது கலாச்சார வேர்களை மறந்து விடக்கூடாது என்ற மைய கருத்தையும் கொண்டுள்ளது. சைவம் நிச்சயம் வரிவிலக்கிற்கு தகுந்த படம். பிராணிகள் மீது அன்பு, நம் கலாச்சாரம் பற்றி எதிர்கால சந்ததியினருக்கு இந்தப் படம் எடுத்துச் செல்லும். எல்லா மொழிகளிலும் வெளியிட தகுதியான படம் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி