செய்திகள்,திரையுலகம் ரசிகருக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்!…

ரசிகருக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்!…

ரசிகருக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்.விஜய் எப்போதுமே தனது ரசிகர்களை ஒருங்கே அரவணைத்து செல்பவர். தான் எவ்வளவு தான் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் ரசிகர்களை சந்திக்காமல் இருக்க மாட்டார். மாதம் இருமுறை, 2வது ஞாயிறு மற்றும் 4வது ஞாயிற்று கிழமைகளில் ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

ஆரம்பத்தில் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள அலுவலகத்தில் ரசிகர்களை சந்தித்து வந்த விஜய், போக்குவரத்து நெரிசல், போலீஸ் கெடுபிடி போன்ற காரணங்களால் ரசிகர்கள் சந்திப்பை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திற்கு மாற்றிவிட்டார்.சமீபத்தில் சென்னை, காஞ்சிபுரம், பெங்களூரூ ஆகிய நகரங்களை சேர்ந்த ரசிகர்கள் விஜய்யை வந்து சந்தித்து விட்டு சென்றனர். இருதினங்களுக்கு முன்னர் சேலம், நெல்லை மற்றும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ரசிகர்கள் சந்தித்துவிட்டு சென்றனர்.

அப்போது நெல்லையை சேர்ந்த ரசிகர் ஒருவர் இறந்துவிட்ட செய்தியை அறிந்து அவரது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார் விஜய். கூடவே நெல்லையை சேர்ந்த ரசிகர்களும் அஞ்சலி செலுத்தினர். மேலும் நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வருகிற ஜூன் 22ம் தேதி வருகிறது. இதனை கொண்டாடுவது தொடர்பாக ரசிகர்கள், விஜய்யை சந்தித்து கலந்து ஆலோசித்து உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி