கேரளா:-பிரபல மலையாள நடிகர் திலீப். இவருக்கும் நடிகை மஞ்சு வாரியாருக்கும் கடந்த 1999வது ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த ஒரு வருடமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மகள் மீனாட்சியுடன் திலீப் தனது வீட்டில் வசித்து வந்தார். நடிகை காவ்யா மாதவனுடன் நடிகர் திலீப்புக்கு ஏற்பட்ட நெருக்கமே கருத்து வேறுபாட்டுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகை மஞ்சு வாரியாருடன் விவாகரத்து கேட்டு நடிகர் திலீப் எர்ணாகுளம் குடும்ப நீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-நடிகை மஞ்சு வாரியார் என்னை மனதளவில் கொடுமைப்படுத்தி வருகிறார்.
இதனால் நான் மிகவும் பாதிப்படைந்துள்ளேன். எனது மனு மீதான விசாரணையை ரகசியமாக நடத்த வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் திலீப்பின் வழக்கறிஞர் நீதிபதியிடம் கேட்டுள்ளார்.மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மனு மீதான விசாரணையினை அடுத்த மாதம் 23ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி