செய்திகள்,திரையுலகம் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் நடிகை சமந்தா!…

முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் நடிகை சமந்தா!…

முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் நடிகை சமந்தா!… post thumbnail image
சென்னை:-விஜய், சூர்யா என இரு முன்னணி கதாநாயகர்களுடன் ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சமந்தா, விக்ரம் நடிக்கும் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை ‘கோலி சோடா’ படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் இயக்குகிறார்.

இப்படத்தில் சமந்தா முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கிறாராம். கிராமத்து பெண்ணாகவும், நகரத்து பெண்ணாகவும் மாறுபட்ட இரண்டு வேடங்களில் நடிக்கவிருக்கிறாராம். இந்த படத்திற்காக இந்தி படவாய்ப்பையும் உதறி தள்ளியுள்ளாராம்.

இப்படத்தில் ‘கோலிசோடா’ படத்தில் நடித்த சிறுவர்களும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்களாம். அவர்கள் பட்டணத்து சிறுவர்களாக வருகிறார்களாம். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி