செய்திகள்,திரையுலகம் வயதாகிவிட்டதால் இனி நடனமாட மாட்டேன்!…நடிகை ஷோபனா பேட்டி…

வயதாகிவிட்டதால் இனி நடனமாட மாட்டேன்!…நடிகை ஷோபனா பேட்டி…

வயதாகிவிட்டதால் இனி நடனமாட மாட்டேன்!…நடிகை ஷோபனா பேட்டி… post thumbnail image
சென்னை:-மலையாளம், தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 300 படங்களுக்கு மேல் நடித்திருப்பவர் ஷோபனா. மூன்று தேசிய விருதுகளை பெற்ற நடிகை. தற்போது அவர் தனது நடனப்பள்ளியில் பயிலும் மாணவர்களை கொண்டு நடன நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். கடைசியாக போடா போடி படத்தில் நடித்திருந்தார்.

விரைவில் வெளியாக இருக்கும் கோச்சடையான் படத்திலும் நடித்துள்ளார். அவர் இனி திரைப்படங்களில் நடனம் ஆடப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்.இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: சினிமா நடிகை என்ற நிலையில் இருந்து நடன ஆசிரியை என்ற நிலைக்கு நான் மாறிவிட்டேன். இருந்தாலும் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் வருகிறது. அதில் சிலவற்றை தேர்வு செய்து நடிக்கிறேன்.

பெரும்பாலான படங்களில் நடன மங்கையாகவும், நடன ஆசிரியையாகவுமே நடிக்க வாய்ப்புகள் வருகிறது. அவற்றை நான் ஒத்துக் கொள்வதில்லை. சினிமாவில் நடனம் ஆடும் வயதை நான் கடந்து விட்டேன். வித்தியாசமான, கதைக்கு முக்கியத்தும் உள்ள என் திறமையை வெளிபடுத்துகிற கேரக்டர்கள் வந்தால் மட்டுமே நடிப்பேன் என்கிறார் ஷோபனா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி