செய்திகள் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு தந்த பாதிரியார் கைது!…

குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு தந்த பாதிரியார் கைது!…

குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு தந்த பாதிரியார் கைது!… post thumbnail image
வாஷிங்டன்:-அமெரிக்க பிராந்தியத்தில் குழந்தைகளை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் முதல் முறையாக ரோமன் கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இஸ்ரேல் பெரியாஸ் (வயது 58) என்ற அந்த பாதிரியார் தேவாலயத்தின் பலிபீட சிறுவனை 8 வயது முதல் 17 வயது வரையில் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாதிரியார் தனது இச்சைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அந்த சிறுவனுக்கு பணம், கம்ப்யூட்டர், கேமரா போன்ற பெருட்களை கொடுத்து வசியம் செய்ததாகவும் தற்போது 21 வயதாகும் அந்த சிறுவன் பல்கலைக் கழகத்தில் படித்து வருவதாகவும் நீதித்துறை செயலாளர் தெரிவித்தார்.அரசுத் தரப்பு வழக்கறிஞர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ததையடுத்து பாதிரியார் பொறுப்பில் இருந்து பெரியாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சுமார் 17 பாதிரியார்கள் மற்றும் 8 மறைமாவட்ட ஆயர்கள் மீது இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு விசாரணை நடைபெற்றாலும் பாலியல் வழக்கில் தண்டனையை எதிர்நோக்கும் முதல் பாதிரியார் பெரியாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி