செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் கிழக்கு உக்ரைன் சுதந்திரம் அடைந்ததாக கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு!…

கிழக்கு உக்ரைன் சுதந்திரம் அடைந்ததாக கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு!…

கிழக்கு உக்ரைன் சுதந்திரம் அடைந்ததாக கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு!… post thumbnail image
டோனட்ஸ்க்:-உக்ரைனின் கிரிமியா தன்னாட்சி பிராந்தியத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டு அந்த பகுதி ரஷ்யாவுடன் இணைந்தது. இதேபோன்று உக்ரைனின் கிழக்குப்பகுதியிலும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அரசு அலுவலகங்களை கைப்பற்றி, தனி நாடு கோரிக்கைக்கான போராட்டத்தை தொடங்கினர்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடும் எதிர்ப்பு மற்றும் ராணுவ நடவடிக்கைகளுக்கு மத்தியில் கிழக்குப்பகுதியில் உள்ள டோனட்ஸ்க் மற்றும் லூகான்ஸ்க் பிராந்தியங்களில் ஞாயிற்றுக்கிழமை பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பின்னர் இந்த பிராந்தியங்கள் சுதந்திரம் பெற்றதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்தனர். இந்த
இதுதொடர்பாக பிரிவினைவாதிகளுடன் பேச்சுவாத்தை நடத்தும்படி உக்ரைன் நாட்டின் இடைக்கால அரசிடம் ரஷ்யா ஏற்கனவே கேட்டுக்கொண்டது. ஆனால், இந்த இணைப்பு கோரிக்கை தொடர்பாக உடனடி பதில் எதுவும் வரவில்லை.

பொதுவாக்கெடுப்பு முடிவை தள்ளி வைக்க வேண்டும் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் விடுத்த வேண்டுகோளையும் போராட்டக்காரர்கள் ஏற்கவில்லை.மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் மீது அவர்கள் சொந்த கருத்தை வெளிப்படுத்தியிருப்பதையே இந்த வாக்கெடுப்பு காட்டுகிறது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதற்கிடையே உக்ரைனில் வருகிற 25ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கிழக்கு உக்ரைனில் பெரும்பாலான வாக்கு சாவடிகளை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.உக்ரைன் அதிபர் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டால் அந்த நாட்டு பொருளாதாரத்தின் மொத்த துறைகளையும் குறிவைத்து நடவடிக்கை எடுப்போம் என்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி