செய்திகள்,திரையுலகம் எதிர்ப்பு காரணமாக ‘லிங்கா’ படப்பிடிப்பு ஐதராபாத்துக்கு மாற்றம்!…

எதிர்ப்பு காரணமாக ‘லிங்கா’ படப்பிடிப்பு ஐதராபாத்துக்கு மாற்றம்!…

எதிர்ப்பு காரணமாக ‘லிங்கா’ படப்பிடிப்பு ஐதராபாத்துக்கு மாற்றம்!… post thumbnail image
சென்னை:-‘கோச்சடையான்’ படத்தை தொடர்ந்து ‘லிங்கா’ படத்தில் ரஜினி நடிக்கிறார். நாயகியாக சோனாக்சி சின்ஹா, அனுஷ்கா நடிக்கின்றனர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த 2ம் தேதி மைசூரில் துவங்கியது.

ரஜினிக்கு மைசூர் ராசியான இடம் ஆகும். ஏற்கனவே அங்கு படமாக்கப்பட்ட பல படங்கள் வெற்றிகரமாக ஓடி உள்ளன. எனவே மைசூரை சுற்றியுள்ள பகுதிகளிலும் மைசூர் அரண்மனையிலும் பெரும் பகுதி காட்சிகளை படமாகக் திட்டமிட்டு இருந்தனர்.ஆனால் மைசூர் அரண்மனையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கவில்லை. மைசூரிலும் படப்பிடிப்பு நடத்துவதற்கு எதிர்ப்பு கிளம்பியது.காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினி செயல்பட்டதாக கண்டித்து கன்னடர்கள் படப்பிடிப்பு நடந்த இடத்தில் போராட்டம் நடத்தினர்.

ரஜினி உருவ பொம்மையை எரிக்கவும் முற்பட்டனர். இதையடுத்து படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்போடு ரஜினி, சோனாக்சி சின்ஹா நடித்த பாடல் காட்சி மற்றும் வசன காட்சிகளை படமாக்கி முடித்தனர்.
கன்னடர்கள் எதிர்ப்பினால் தொடர்ந்து அங்கு படப்பிடிப்பபை நடத்த இயலாத சூழ்நிலை நிலவுகிறது. இதையடுத்து ஐதராபாத்தில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடக்க உள்ளது. ரஜினியும் படத்தின் இன்னொரு நாயகியான அனுஷ்காவும் நடிக்கும் காட்சிகளை அங்கு படமாக்குகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி