செய்திகள் காதலியின் டார்ச்சர் தாங்காமல் மீண்டும் சிறைக்கு சென்ற காதலன்!…

காதலியின் டார்ச்சர் தாங்காமல் மீண்டும் சிறைக்கு சென்ற காதலன்!…

காதலியின் டார்ச்சர் தாங்காமல் மீண்டும் சிறைக்கு சென்ற காதலன்!… post thumbnail image
பாரிஸ்:-பிரான்ஸ் நாட்டின் பாஸ் டி கேலாய்ஸ் நகரை சேர்ந்த ஒருவர், குடி போதையில் வாகனம் ஓட்டியதாகவும், போக்குவரத்து விதிகளை மீறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் பரோலில் வெளியில் வந்தார்.

பரோலில் வெளி வரும் கைதிகளுக்கு, எலக்ட்ரானிக் சிப் ஒன்றை உடலில் பொருத்தி அனுப்புவது வழக்கம். பரோல் காலம் முடிந்து அவர்கள் மீண்டும் சிறைக்கு வரவேண்டும். பரோல் காலத்தில் தப்பி விடாமல் இருக்க எலக்ட்ரானிக் சிப் பொருத்தப்படுகிறது. இந்நிலையில் பரோலில் வந்த வாலிபர், திடீரென தன் உடலில் இருந்த எலக்ட்ரானிக் சிப்பை துண்டித்து விட்டார்.

அதில் இருந்து சிக்னல் வராததால், உஷாரடைந்த அதிகாரிகள் உடனடியாக தேடுதல் வேட்டை நடத்தி ஆசாமியை பிடித்தனர். விசாரணையில், காதலி டார்ச்சர் தாங்க முடியவில்லை. அதனால்தான் எலக்ட்ரானிக் சிப்பை துண்டித்தேன். வெளியில் இருந்து காதலியிடம் மோதிக் கொண்டிருப்பதை விட சிறையில் இருப்பது மேல். என்னை சிறைக்கு அழைத்து செல்லுங்கள் என்று அவர் கூறினார். அதை கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அரசு வக்கீல் கூறுகையில்,போக்குவரத்து விதிமுறைகளை மீறிய சிறுசிறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டார். இப்போது எலக்ட்ரானிக் சிப்பை துண்டித்து குற்றம் புரிந்ததற்காக, மேலும் 2 மாதங்கள் அவர் சிறையில் இருப்பார் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி