செய்திகள்,திரையுலகம் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக போராடும் பாலிவுட் நடிகை!…

ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக போராடும் பாலிவுட் நடிகை!…

ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக போராடும் பாலிவுட் நடிகை!… post thumbnail image
நியூயார்க்:-32 வயதாகும் முன்னாள் மிஸ் இந்தியாவும் நடிகையுமான செலினா ஜெட்லி, ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான ஆதரவு திரட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது செலினா ஜெட்லி ஒரினச் சேர்க்கைக்கான உரிமைக்காக தான் தொடர்ந்து போராட உள்ளதாக தெரிவித்துள்ளார். அவரது உயிருக்கு ஆபத்து உள்ள போதும், தனது இரட்டை குழந்தைகளுடன் வசித்து வரும் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.இது தொடர்பாக ஒரு வீடியோ படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் தனது ஆண் நண்பனை தன் வீட்டிற்கு அழைத்து வரும் ஒரு ஆண், தனது பெற்றோர் சம்மதத்துடன் அவனுடன் உறவு ஏற்படுத்தி கொள்ளும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. அமைப்பில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் ஐ.நா மனித உரிமை அமைப்பின் தலைவரான நவி பிள்ளை செலினாவுக்கு இந்த வாய்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி