அந்த நேரத்தில் அவருக்கும், அவரது சித்திக்கும் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக ஆந்திராவுக்கு சென்ற அஞ்சலி, சில நாட்கள் மாயமாகி பின்னர் வெளியே வந்தார். ஆனால், அதன்பிறகு சில தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வந்த அவர், அமெரிக்காவில் ஒருவரை திருமணம் செய்து செட்டிலாகி விட்டதாகவும் கடந்த சில மாதங்களாக செய்திகள் புகைந்தன.
அதன்பிறகு அமெரிக்காவுக்கு செல்வதை நிறுத்தி விட்டு, நான் எங்கும் செல்லவில்லை. இங்குதான் இருக்கிறேன் என்று மீண்டும் ஸ்டேட்மென்ட் கொடுத்த அஞ்சலியை இப்போது ஆந்திராவில் உள்ள முன்னணி ஹீரோக்கள் கண்டுகொள்வதில்லையாம்.இப்போது சீனிவாச ரெட்டி என்றொரு காமெடியனுக்கு ஜோடியாகியிருக்கிறாராம்.அதுமட்டுமின்றி, இந்த படத்தில் புதுவரவு நடிகைகளுக்கு கொடுப்பது போன்றுதான் அஞ்சலிக்கு குறைவான சம்பளம் கொடுத்திருக்கிறார்களாம்.வேறு வழியே இல்லாமல் இந்த படத்தில் தற்போது கமிட்டாகியிருக்கிறாராம் அஞ்சலி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி