மும்பை:-இந்தி டைரக்டர் ரோஹித் ஷெட்டி ஒரு படத்திற்கு வாங்கிய ரூ.20 கோடிதான் அதிகபட்சமாக இதுவரை இருந்து வந்தது. இப்போது அவரை பிரபுதேவா மிஞ்சி விட்டார். பிரபுதேவா சம்பளம் ரூ.30 கோடியாக உயர்ந்துள்ளது.அடுத்து அவர் இயக்கப்போகும் இந்தி படத்துக்குதான் இவ்வளவு தொகை வாங்குகிறாராம்.
இதனால் இந்திபட உலகினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். வேறு எந்த இந்தி இயக்குனரும் இவ்வளவு தொகை சம்பளம் வாங்கியதில்லையாம்.இவர் வாங்கும் சம்பளம் இந்தியில் முன்னணி கதாநாயகர்கள் சம்பளத்துக்கு இணையானது என்கின்றனர். தமிழ்ப்பட உலகின் முன்னணி கதாநாயகர்கள் இவ்வளவு தொகை சம்பளமாக வாங்கியது இல்லை.
பிரபுதேவா இந்தியில் சல்மான்கானை வைத்து ‘வாண்டட்’, அக்ஷய்குமாரை வைத்து ‘ரவுடி ரத்தோர்’, கிருஷ்குமார், சுருதிஹாசன் ஜோடியாக்கி ‘ராமையா வஸ்தாவையா’, சாகித்கபூர், ஷோனாக்ஷி சின்ஹாவை ஜோடியாக்கி ‘ஆர்.ராஜ்குமார்’, அஜய்தேவ்கானை வைத்து ‘ஆக்ஷன் ஜாக்சன்’ படங்களை எடுத்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி