செய்திகள்,திரையுலகம் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டவர் மீது நடிகை சுருதிஹாசன் வழக்கு!…

தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டவர் மீது நடிகை சுருதிஹாசன் வழக்கு!…

தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டவர் மீது நடிகை சுருதிஹாசன் வழக்கு!… post thumbnail image
சென்னை:-நடிகை சுருதிஹாசன், தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிசியாக நடிக்கிறார்.தற்போது ரேஸ்குர்ரம் என்ற தெலுங்கு படத்தில் கவர்ச்சியாக நடனம் ஆடி உள்ளார். இந்த படத்துக்கான போஸ்டர்கள் ஐதராபாத் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டு இருந்தது. அதில் சுருதிஹாசன் மிகவும் கவர்ச்சியாக இருந்தார்.

இந்த படங்களை எல்லோரும் உற்று பார்த்ததால் போக்குவரத்து நெரில் ஏற்பட்டது. இதனால் போலீசாரும் சமூக ஆர்வலர்களும் அவற்றை கிழித்து எறிந்தனர்.
இந்நிலையில் இப்படத்தில் சுருதிஹாசன் கவர்ச்சியாக ஆடிய படங்கள் இன்டர்நெட்டில் வெளியானது. யாரோ மர்ம நபர் அந்த படங்கள் அனைத்தையும் திருடிநெட்டில் வெளியிட்டு உள்ளார். இதை பார்த்ததும் சுருதிஹாசன் அதிர்ச்சியானார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, எனது படங்களை வெளியிட்டவர் மீது போலீசில் புகார் செய்வேன். சட்ட நடவடிக்கையும் எடுப்பேன்’’ என்றார்.ஏவடு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜ் அல்லது அப்படத்தின் ஸ்டில் போட்டோ கிராபர் இருவரில் யாரேனும் ஒருவர்தான் இந்த படங்களை வெளியிட்டு இருக்க வேண்டும் என்று அவர் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி