செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு ஐபிஎல் போட்டிகளை மாணவர்கள் இலவசமாக பார்க்க புதிய திட்டம் அறிமுகம்!…

ஐபிஎல் போட்டிகளை மாணவர்கள் இலவசமாக பார்க்க புதிய திட்டம் அறிமுகம்!…

ஐபிஎல் போட்டிகளை மாணவர்கள் இலவசமாக பார்க்க புதிய திட்டம் அறிமுகம்!… post thumbnail image
ஜாம்ஷெட்பூர்:-சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை பார்க்க விரும்பும் மாணவர்கள், ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கத்தால் மைதானத்தின் வளாகத்தில் விநியோகிக்கப்படும் விண்ணப்ப படிவத்தை வாங்கி அதில் தங்களை பற்றிய முழுவிபரத்தை எழுதி பள்ளி முதல்வரிடம் கையொப்பம் பெற்று சமர்பிக்க வேண்டும் என்று ஜே.எஸ்.சி.ஏ துணை செயலாளர் ஆசீம் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், விண்ணப்பங்கள் ஏப்ரல் 30வரை வழங்கப்படும் என்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஏப்ரல் 30 மாலை 6 மணிக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் மே 1 ஆம் தேதி குலுக்கல் முறையில் தேர்ந்தேடுக்கும் 50 அதிருஷ்ட மாணவர்களுக்கு தங்கள் குடும்பத்தினர் ஒருவருடன் போட்டியை கண்டு களிக்கும் வகையில் இரண்டு டிக்கெட்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி