அரசியல்,செய்திகள் யாருடைய பெண்ணையும் இழுத்துக் கொண்டு ஓடிவிடவில்லை!… கெஜ்ரிவாலின் பேச்சால் பரபரப்பு…

யாருடைய பெண்ணையும் இழுத்துக் கொண்டு ஓடிவிடவில்லை!… கெஜ்ரிவாலின் பேச்சால் பரபரப்பு…

யாருடைய பெண்ணையும் இழுத்துக் கொண்டு ஓடிவிடவில்லை!… கெஜ்ரிவாலின் பேச்சால் பரபரப்பு… post thumbnail image
புதுடெல்லி:-டெல்லிக்கு உட்பட்ட சாந்தினி சவுக் பகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தனது 49 நாள் ஆட்சியை குறிப்பிட்டு பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ‘நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து எனது அரசு நிறைவேற்றியது போல் எந்த அரசியல் கட்சியும் குறுகிய காலத்தில் திட்டங்களை நிறைவேற்றியதில்லை’ என்று கூறினார்.

டெல்லி ஆட்சியை போட்டுவிட்டு ஓடிப்போனதாக எதிர்க்கட்சிகள் கூறிவரும் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துப் பேசிய அவர், ‘நான் ஓடிப்போனதாக சிலர் கூறி வருகின்றனர். யாருடைய பெண்ணையும் இழுத்துக் கொண்டு நான் ஓடிவிடவில்லை. நான் பாகிஸ்தானுக்கும் சென்றுவிடவில்லை.நான் இங்கேதான் இருக்கிறேன். எனது இறுதிமூச்சு உள்ள வரை ஊழலை எதிர்த்து போராடுவேன்.

குருஷேத்திரப் போர் நடந்த போது கிருஷ்ண பகவானை சந்தித்த துரியோதனன், பெரிய சேனையை தனக்குத் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். ஆனால், அர்ஜுணனோ போர்க்களத்தில் கிருஷ்ண பகவான் தனக்கு துணையாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான்.மோடியிடமும், ராகுலிடமும் இன்று பணபலம் இருக்கலாம். ஆனால், எங்களுடன் கடவுள் இருக்கிறார்’ என்று தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி