செய்திகள்,திரையுலகம் முதல் முறையாக தமிழில் அறிமுகமாகும் சிண்டியன் இன நடிகை!…

முதல் முறையாக தமிழில் அறிமுகமாகும் சிண்டியன் இன நடிகை!…

முதல் முறையாக தமிழில் அறிமுகமாகும் சிண்டியன் இன நடிகை!… post thumbnail image
சென்னை:-‘கலர் கண்ணாடிகள்‘ பட இயக்குனர் ராகுல் கூறும்போது, மலேசியாவில் உள்ள பாரில் பாட்டு பாட செல்லும் ஒரு இளைஞன் சந்திக்கும் பிரச்னைகள்தான் கதை. அஸ்வின் ஹீரோ.

மலேசியாவில் வாழும் இந்திய தந்தைக்கும், மலேசிய தாய்க்கும் பிறந்த திவ்யாஸ்ரீ ஹீரோயின். இந்த கலப்பு திருமண தம்பதிகளுக்கு பிறப்பவர்களை மலேசியாவில் சிண்டியன் என்று கூறுவார்கள். ஒரு சிண்டியன் தமிழ் படத்தில் நடிப்பது இதுதான் முதல்முறை. மகிபாலன் ஒளிப்பதிவு. இனியவன் இசை.

வி.வீரவிஸ்வாமித்ரன் தயாரிக்கிறார். ஆத்தா உன் கோயிலிலே, மிட்டா மிராசு, மாங்கல்யம் தந்துனானே போன்ற படங்களில் ரவிராகுல், என்ற பெயரில் ஹீரோவாக நான் நடித்திருக்கிறேன். கே. ர.ராகுல் என்ற பெயரில் இப்படத்தை இயக்குகிறேன். இப்படத்தின் ஷூட்டிங் முழுக்க மலேசியாவில் நடந்துள்ளது என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி