இந்நிலையில் கடந்த ஆண்டு வீரம் படத்தில் அஜித் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை மட்டும் ஏற்று நடித்தார்.தற்போது ராஜமவுலி தமிழ் தெலுங்கில் இயக்கி வரும் பாகுபலி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அனுஷ்கா ஹீரோயினாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர ஆகடு என்ற படத்திலும் நடித்து வருகிறார். ஒரே நேரத்தில் நான்கைந்து படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த தமன்னாவுக்கு வாய்ப்புகள் மங்க ஆரம்பித்ததையடுத்து பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தினார். அங்கும் பெரிதாக சாதிக்க முடியாததால் சோர்வடைந்தார்.
இந்நிலையில் தெலுங்கில் வி.வி.விநாயக் இயக்கும் புதிய படத்தில் குத்து பாடலுக்கு நடனம் ஆட வாய்ப்பு வந்தது. இப்படத்தில் சமந்தா ஹீரோயினாக நடிப்பதால் முதலில் குத்து பாடலுக்கு ஒப்புக்கொள்ள தயங்கினார். ஆனால் இயக்குனர் விநாயக் வெற்றி இயக்குனர் என்பதாலும், படத்தை தயாரிப்பது பெரிய தயாரிப்பாளர் என்பதாலும் இந்த வாய்ப்பை தட்டிக் கழிக்க முடியவில்லையாம். இவரது குத்துபாடல் ஏப்ரல் மாதம் இறுதியில் அல்லது மே மாதம் தொடக்கத்தில் படமாக்கப்பட உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி