மிக வித்தியாசமான கதை, வித்தியாசமான கதைக்களம் என்ற வகையில் எல்லோராமும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் ‘புரிதல் அவசியம்’ என்ற உன்னத கருத்தை வலியுறுத்தி வெளிவரவிருக்கிறது.காதலுக்கும் ஊடலுக்கும் இடையே புரிதலின் முக்கியமான பங்களிப்பை பற்றி கூறும் இந்த படத்தை பற்றி இப்படத்தின் இயக்குனர் அனீஸ் கூறும்போது,இந்த படம் நமது நாட்டின் பிரதானமான இரு மதங்களின் சம்பிரதாயங்களையும், கலாச்சாரத்தையும் பின்னணி ஆக வைத்து எடுக்கப்பட்ட படமாகும். நஸ்ரியாவின் நடிப்பும் சரி, தோற்றமும் சரி, அவருக்கு ஏன் இப்படி ஒரு புகழ் என்பதற்கு விடை கொடுக்கும். ஜெய் எல்லோரையும் எப்போதும் கவரும் வண்ணம் நடித்துள்ளார்.
இசையமைப்பாளர் கிப்ரானின் இசை இந்த படத்தின் வெற்றிக்கு பெரிதளவு உதவும். தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் என் மீது நம்பிக்கை வைத்து படம் தந்ததற்கு இந்த நேரத்தில் நன்றிகூற கடமைப்பட்டிருக்கிறேன். ‘திருமணம் எனும் நிக்காஹ்’ குடும்பத்தோடு பார்த்து மகிழும், ஒரு மெல்லிய காதல் இழை ஓடும், மெய்மறக்க செய்யும் இசை கலந்த சிறந்த படம் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி