செய்திகள்,விளையாட்டு பி.சி.சி.ஐ.யின் இடைக்கால தலைவராக சுனில் கவாஸ்கரை நியமிக்க கோர்ட்டு பரிந்துரை!…

பி.சி.சி.ஐ.யின் இடைக்கால தலைவராக சுனில் கவாஸ்கரை நியமிக்க கோர்ட்டு பரிந்துரை!…

பி.சி.சி.ஐ.யின் இடைக்கால தலைவராக சுனில் கவாஸ்கரை நியமிக்க கோர்ட்டு பரிந்துரை!… post thumbnail image
புதுடெல்லி:-ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து என்.சீனிவாசன் உடனடியாக விலக வேண்டும். அவர் விலகாவிட்டால், அவரை நீக்குவதற்கான உத்தரவை பிறப்பிப்போம்’ என்று ஏ.கே.பட்நாயக் தலைமையிலான பெஞ்ச் அறிவுறுத்தியது.

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசன் தானாகவே முன்வந்து பதவியை விட்டு விலக வாய்ப்பில்லை என்று தெரியவந்துள்ளது. அடுத்த கட்ட முடிவை மேற்கொள்வதற்கு முன்பாக சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்காக இந்திய கிரிக்கெட் வாரியம் காத்திருக்கிறது என்று அதன் துணைத் தலைவர் ஷிவ்லால் யாதவ் தெரிவித்தார்.வழக்கு விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணை குழு அறிக்கைபடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் பி.சி.சி.சி. உறுதி அளித்தது. முகுல் முத்கல் குழு அறிக்கையின் படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் விசாரணை நடத்தப்படும் என்றும் பி.சி.சி.ஐ. தகவல் தெரிவித்தது. ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் நாளை இடக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் சுப்ரீம் கோர்ட்டு கூறியது.

தீர்ப்பு வெளியாகும் வரையில் பி.சி.சி.ஐ.யின் இடைக்கால தலைவராக சுனில் கவாஸ்கரை நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு யோசனை கூறியது. மேலும், ஐ.பி.எல். போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் பங்கேற்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு பி.சி.சி.ஐ.க்கு பரிந்துரை செய்துள்ளது. பரிந்துரை குறித்து நாளை பதில் அளிக்க பி.சி.சி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி