செய்திகள் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் சுத்தமான காற்று!…

பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் சுத்தமான காற்று!…

பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் சுத்தமான காற்று!… post thumbnail image
சீனா:-காற்று, தண்ணீர் மாசுபாட்டினால் உடல்நலத்துக்கு அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது.அதிலும் சீனா மக்களுக்கு சுற்றுச்சூழல் மாசு மிகுந்த சவாலாக இருக்கிறது. இதனால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களை போல அங்கு ‘பாட்டில் சுத்தமான காற்று’ விற்பனைக்கு வந்துள்ளது.

லினான் என்ற இடத்திலுள்ள உயரமான மலைப்பகுதியில் இயற்கை சூழலில் வீசும் காற்றை பாட்டிலில் பிடித்துக்கொண்டு வருகிறார்கள்.பின்னர் இது நாடு முழுவதும் விற்பனைக்கு வருகிறது. பூங்காக்களில் கார்ட்டூன் பாத்திரம் வேடமணிந்தவர்கள் மூலம் விலை கூவி வாடிக்கையாளருக்கு வழங்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி