அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் உலகின் 6-வது பணக்காரராக சோனியா காந்தி மாறியது எப்படி?…மேனகாகாந்தி கேள்வியால் பரபரப்பு…

உலகின் 6-வது பணக்காரராக சோனியா காந்தி மாறியது எப்படி?…மேனகாகாந்தி கேள்வியால் பரபரப்பு…

உலகின் 6-வது பணக்காரராக சோனியா காந்தி மாறியது எப்படி?…மேனகாகாந்தி கேள்வியால் பரபரப்பு… post thumbnail image
பிலிபிட்:-பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான மேனகாகாந்தி கடந்த தடவை அனோலா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.இந்த தடவை அவருக்கு பா.ஜ.க. மேலிடம், பிலிபிட் தொகுதியை ஒதுக்கியுள்ளது. நேற்று அவர் பிலிபிட் சென்று தன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.பிறகு அவர் புரன்பூர் பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் தலைவரும், தனது அக்காள் முறை வருபவருமான சோனியாவை கடுமையாக தாக்கினார். அவர் கூறியதாவது:–

சோனியாகாந்தி இந்த நாட்டின் மருமகளாக இத்தாலியில் இருந்து இந்தியாவுக்கு வந்த போது எதையும் கொண்டு வரவில்லை. வெறும் கையை வீசிக் கொண்டுதான் வந்தார்.அவர் மீது இந்திய மக்கள் அனைவரும் அன்பு மழை பொழிந்தனர். பாசம் காட்டினார்கள். ஆனால் சோனியா அதற்கு ஏற்ப நடந்து கொள்ளவில்லை.இன்று உலகப் பெண்மணிகளில் 6–வது பெரும் பணக்காரராக சோனியா உள்ளார் என்று மேற்கத்திய பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அவருக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து, எப்படி வந்தது.சோனியா திருமணம் முடிந்து வந்த போது ஒரு பைசா கூட வரதட்சணை பெற்று வரவில்லை. அப்படிப்பட்டவருக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று தெரியவில்லை.

நாட்டின் மின் திட்டங்கள், சாலை திட்டங்கள், கல்வித் திட்டங்களில் மாபெரும் ஊழல் நடந்துள்ளது. எதிர்கால நமது சிறுவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளது.சோனியாவும் அவரது காங்கிரஸ்காரர்களும் ஆங்கிலேயர்களை விட 100 மடங்குக்கு மேல் இந்த நாட்டில் ஊழல் செய்து சுரண்டியுள்ளனர்.சுதந்திரப் போராட்ட காலத்தில் துப்பாக்கி குண்டுகளையும், தடியடிகளையும் நம் முன்னோர்கள் வீரத்துடன் எதிர்கொண்டனர். ஆனால் அந்த சாதனைகளை எல்லாம் முறியடிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் கடந்த 10 ஆண்டுகளில் ஊழல்கள் செய்துள்ளனர்.இவ்வாறு மேனகாகாந்தி கூறினார். அவரது பேச்சால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி