அரசியல்,செய்திகள்,திரையுலகம் ஆரத்தி எடுத்தவருக்கு பணம் கொடுத்ததாக நடிகர் மீது வழக்கு!…

ஆரத்தி எடுத்தவருக்கு பணம் கொடுத்ததாக நடிகர் மீது வழக்கு!…

ஆரத்தி எடுத்தவருக்கு பணம் கொடுத்ததாக நடிகர் மீது வழக்கு!… post thumbnail image
தேனி:-தேனி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பார்த்திபனை ஆதரித்து அ.தி.மு.க. பேச்சாளர்கள் தேனி மாவட்டம் முழுவதும் பிரசாரம் செய்து வருகின்றனர். போடி பகுதிகளில் நேற்று மாலை நடிகர்கள் வையாபுரி, தியாகு ஆகியோர் பிரசாரம் செய்தனர்.

போடி நகர் 1–வது வார்டு புதூர் பகுதியில் நடிகர்கள் வையாபுரி, தியாகு ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் ஆரத்தி எடுத்துள்ளனர். பின்னர் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு, நடிகர்கள் சென்றுவிட்டனர்.

இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தின்போது ஆரத்தி எடுத்தவர்களுக்கு நகைச்சுவை நடிகர் வையாபுரி பணம் கொடுத்துள்ளார் என, போடி நகர் போலீஸ் நிலையத்தில் போடி பறக்கும்படை பிரிவு தாசில்தார் குணசேகரன் காலை புகார் அளித்தார். அதன் பேரில் நடிகர் வையாபுரி மீது போடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி