செய்திகள்,திரையுலகம் பேச பயப்படும் காமெடி நடிகர் வடிவேலு!…

பேச பயப்படும் காமெடி நடிகர் வடிவேலு!…

பேச பயப்படும் காமெடி நடிகர் வடிவேலு!… post thumbnail image
சென்னை:-சுமார் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஜெகஜால புஜபல தெனாலி ராமன் படத்தில் இறங்கியிருக்கிறார் வடிவேலு.கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் வெளிவரும் இப்படத்திற்கு டப்பிங் பரணி ஸ்டுடியோவில் நடந்து வருகிறது.

75 சதவிகிதம் முடிவடைந்த இப்படத்தில் விட்டு போன சில குரல்களுக்கு அவ்வப்போது சிலரை அழைத்து டப்பிங் பேச வைத்து கொண்டிருக்கிறாராம் படத்தின் இயக்குனர் யுவராஜ். எப்போதும் டப்பிங்கிற்கு வரும் வடிவேலு ஸ்டுடியோவிற்கு வெளியே நின்று ஜாலியாக அரட்டை அடித்து கொண்டிருப்பது வழக்கம்.

ஆனால் இப்போதெல்லாம் வெளியே ஒரு கேரவன் எப்போதும் நின்றுக்கொண்டிருக்கிறதாம். வெளியே எக்குதப்பா ஏதேனும் வாய்விட்டுவிடுவோமோ என்ற பயத்தில் போர் அடித்தால் கேரவனுக்குள் சென்று விடுகிறாராம் வடிவேலு.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி