செய்திகள்,திரையுலகம் ரஜினியை ‘தலைவா’ என அழைக்கும் ஷாருக்கான்!….

ரஜினியை ‘தலைவா’ என அழைக்கும் ஷாருக்கான்!….

ரஜினியை ‘தலைவா’ என அழைக்கும் ஷாருக்கான்!…. post thumbnail image
சென்னை:-கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஷாரூக்கான் பேசுகையில், “25 வருடங்களுக்கு முன்பு ஒரு இந்தி படப்பிடிப்பில் ரஜினிகாந்தை முதன்முதலாக பார்த்தேன். அப்போது நான் ஒரு ரசிகனாக கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டிருந்தேன்.

ரஜினியுடன் நடித்துக்கொண்டிருந்த நடிகர்-நடிகைகள் எல்லோரும் மதிய உணவு சாப்பிட போய் விட்டார்கள். இவர் மட்டும் சாப்பிடாமல் சிகரெட்டை ஸ்டைலாக தூக்கிப்போட்டு பிடித்து பிராக்டீஸ் செய்து கொண்டிருந்தார். பிற்பகல் 3 மணி. எல்லோரும் சாப்பிட்டு முடித்துவிட்டார்கள். ஆனால் இவர் மட்டும் தன் பிராக்டிஸை விடாமலிருந்தார். வெற்றிபெற கடின உழைப்பு தேவை என்பதை இந்த மனிதரைப் பார்த்துதான் நான் கற்றுக் கொண்டேன். நான் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். அவர் படங்களை அந்த அளவுக்கு ரசித்துப் பார்த்திருக்கிறேன். என்னுடைய ரா-1 படத்துக்கு ரஜினிகாந்த் உதவினார். தமிழில் எனக்கு நன்றாகத் தெரிந்த வார்த்தை தலைவா.

அந்த வார்த்தைக்குரியவருக்காகத்தான் இன்று நான் சென்னை வந்திருக்கிறேன். தமிழ் படங்கள் நாட்டுக்கு பெருமை சேர்க்கின்றன. இந்த விழாவுக்கு வந்துள்ள திரையுலக ஜாம்பவான்களுடன் நானும் இருப்பதை பெருமையாக நினைக்கிறேன். நான் சென்னை வரும்போதெல்லாம் தமிழ் மக்கள் என் மீது அன்பு செலுத்துகிறார்கள். இங்கு வந்தால் எனது சொந்த வீட்டுக்கு வந்த மாதிரிதான் இருக்கிறது,” என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி