இந்நிலையில், அரசியல் பிரவேசம் செய்ய முடிவு செய்துள்ள குல் பனாக், ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார். அக்கட்சியின் உயர்மட்டக்குழு முடிவின்படி அவர் வருகின்ற மக்களவை தேர்தலில் சண்டிகார் தொகுதியில் போட்டியிடுகிறார்.இந்த தொகுதியில் நகைச்சுவை நடிகர் ஜஸ்பால் பட்டியின் விதவை மனைவியான சவிதா பட்டி, ஆம் ஆத்மி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். கடந்த வாரம் அவர் போட்டியில் இருந்து விலகியதால், அவருக்குப் பதிலாக குல் பனாக் நிறுத்தப்படுகிறார். இதுபற்றி கட்சி மேலிடம் முறைப்படி அறிவிக்கும் முன்பே குல் பனாக் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
இது குறித்து குல் பனாக் பேசுகையில், “ஊழலற்ற நேர்மையான அரசியலில் ஈடுபடவே நான் விரும்பினேன். எனவே தான் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துள்ளேன். நான் சண்டிகரில் தான் பிறந்து வளர்ந்தேன். இது எனது சொந்த ஊராகும்” என்று தெரிவித்தார்.முன்னாள் மத்திய மந்திரி பவன் குமார் பன்சாலை இந்த தொகுதியில் நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி