செய்திகள்,திரையுலகம் முதல்முறையாக இணையும் கமல்-ஸ்ருதி!…

முதல்முறையாக இணையும் கமல்-ஸ்ருதி!…

முதல்முறையாக இணையும் கமல்-ஸ்ருதி!… post thumbnail image
சென்னை:-கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன் மற்றும் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமை சேர்ந்த ஜோய் பரூவா ஆகிய மூவரும் சேர்ந்து ஒரு ஆல்பத்தை உருவாக்கியுள்ளனர்.

இந்த ஆல்பத்திற்கு அஸ்ஸாம் இசையமைப்பாளர் ஒருவர் இசையமைக்க, பாடலை எழுதியுள்ளார் உலகநாயகன் கமல்ஹாசன். தமிழ் மற்றும் அஸ்ஸாம் மொழி கலைஞர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மியூசிக் ஆல்பம் இருமொழி ரசிகர்களையும் பெரிதும் கவர்ந்து வருகிறது.

இந்த பாடலை பாடியுள்ள ஸ்ருதிஹாசன் தனது முதல் பாடலை ஆறு வயதில் பாடியுள்ளார். இவரை போலவே அஸ்ஸாம் பாடகரும் தனது 4வது வயதிலேயே முதல் பாடலை பாடியுள்ளார். இருவருமே கலைக்குடும்பத்தில் இருந்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் இணைந்து பாடியுள்ள இந்த ஆல்பம் அஸ்ஸாம் மற்றும் தமிழ் மொழி ரசிகர்கள் மட்டுமின்றி பிற மொழி ரசிகர்களையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி