செய்திகள்,பொருளாதாரம் சென்செக்ஸ் 22 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை!…

சென்செக்ஸ் 22 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை!…

சென்செக்ஸ் 22 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை!… post thumbnail image
மும்பை:-மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 22 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மும்பை பங்குச் சந்தை மிகவும் சரிவடைந்தது. தற்போது அது இமாலய உச்சத்தை தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பங்கு சந்தையில் அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீடு மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 2 வாரத்தில் ரூ.7 ஆயிரம் கோடி அளவிற்கு அந்நிய நிதி நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.நடப்பு ஜனவரி மாதத் திலும், பிப்ரவரி மாத ஆரம்பத்திலும் அந்நிய நிதி நிறுவனங்கள் தங்களது முதலீடு களை திரும்ப பெற்றன.

இந்நிலையில், பிப்ரவரி மாதம் மத்தியில் அந்நிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு மீண்டும் அதிகரித்து வருகிறது. பிப்ரவரி மத்தியில் தொடங்கி 15 தினங்களில் சுமார் ரூ.7 ஆயிரம் கோடி அளவிற்கு அந்நிய நிதி நிறுவனங்கள் பங்குகளில் முதலீடு செய்துள்ள தாக பங்கு சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன. கடன் பத்திரங்களில் நடப்பு ஆண்டில் இதுவரை 500 கோடி டாலரை அந்நிய நிதி நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

இந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரதன்மை உள்ளிட்ட சூழல், மக்களவை தேர்தலுக்கு பிறகு மத்தியில் புதிய ஆட்சி அமைவது உள்ளிட்ட பல்வேறு காரணங் களால் அந்நிய நிதி நிறுவனங்களில் முதலீடு அதிகரித்து வருவதாக பங்கு சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.கடந்த 2013ம் ஆண்டில் அந்நிய நிதி நிறுவனங்கள் இந்திய பங்கு சந்தையில் ரூ.1.12 லட்சம் கோடி அளவிற்கு முதலீடு செய்திருந்தன. மக்களவை தேர்தலுக்கு பிறகு மத்தியில் அமையும் புதிய ஆட்சியை பொறுத்தே அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீடு கொள்கை அமையும் என்றும் பங்கு சந்தை வல்லுநர்கள் தெரிவித்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி