செய்திகள்,திரையுலகம் சாமியிடம் அடி வாங்காமல் தப்பியதற்காக சந்தோசப்படும் நடிகை!…

சாமியிடம் அடி வாங்காமல் தப்பியதற்காக சந்தோசப்படும் நடிகை!…

சாமியிடம் அடி வாங்காமல் தப்பியதற்காக சந்தோசப்படும் நடிகை!… post thumbnail image
சென்னை:-அகடம் படத்தில் பேய் வேடத்தில் நடித்தவர் ஸ்ரீபிரியங்கா. தற்போது கங்காரு, சரணாலயம், 13ம் பக்கம் பார்க்க ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது: அகடம் படத்தில் அறிமுகமானேன். முதல் படத்திலேயே பேய் வேடம். கதைப்படி ஹீரோவுக்கு மட்டும் கண்ணுக்கு தெரிவேன். மற்றவர்களுக்கு தெரியமாட்டேன்.

ஒரு காட்சியில் நான் கோபமாக தனியாக ஒரு இடத்தில் நிற்பதுபோல் காட்சி படமாக்கினார்கள். அப்போது மெதுவாக பின்பக்கம் திரும்பி பார்த்தேன். அங்கே ஒருவர் நின்றிருந்தார்.அவரை பார்த்து நான் நடுங்கிவிட்டேன். எனக்கே தெரியாமல் அங்கு உதவி இயக்குனர் நின்றிருந்தார் என்பது பிறகுதான் தெரிந்தது. 13ம் பக்கம் பார்க்க படத்தில் இருமாறுபட்ட குணம் கொண்டவளாக நடிக்கிறேன். அதில் ஒன்று பேய் என் உடலில் இருப்பதுபோல் வேடம். தொடர்ந்து பேய் படமே வருவது ஏன்? என்கிறார்கள். அந்த வேடத்தை நான் தேடிச் செல்லவில்லை. எல்லா வேடங்களிலும் நடிக்கவே ஆசை. சாமி இயக்கும் கங்காரு படத்தில் அண்ணன் மீது பாசம் காட்டும் தங்கை வேடம்.

இப்படத்தின் இயக்குனர் சாமியிடம் அடிவாங்கினீர்களா? என்கிறார்கள். நன்றாக நடித்துவிட்டதால் அடியிலிருந்து தப்பிவிட்டேன். ஹீரோயின்களை அடிக்கும் பழக்கமெல்லாம் இப்போது அவருக்கு கிடையாது. இவ்வாறு ஸ்ரீபிரியங்கா கூறினார். மிருகம் படத்தில் நடித்த பத்மபிரியாவின் கன்னத்தில் சாமி பளார் விட்டது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி