அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் ப.சிதம்பரத்திற்கு கொலை மிரட்டலா? பெரும் பரபரப்பு…

ப.சிதம்பரத்திற்கு கொலை மிரட்டலா? பெரும் பரபரப்பு…

ப.சிதம்பரத்திற்கு கொலை மிரட்டலா? பெரும் பரபரப்பு… post thumbnail image
காரைக்குடி:-காரைக்குடியை அடுத்த மானகிரியில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீடு உள்ளது. அந்த வீட்டின் அருகே நேற்று போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நிதி அமைச்சரின் வீட்டின் அருகே உள்ள கால்வாயில் கம்ப்யூட்டரில் டைப் செய்யப்பட்ட துண்டு பிரசுரங்கள் கிடந்தன.

அதில் ”ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். கூடங்குளம் அணு மின் நிலையத்தை அகற்ற வேண்டும். மீனவர் பிரச்னையில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசை கண்டிக்கிறோம்” போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.தமிழர் விடுதலைப்படை என்ற பெயரில் அச்சடிக்கப்பட்டிருந்த அந்த துண்டு பிரசுரத்தால் போலீஸார் பெரிதும் பரபரப்பு அடைந்தனர். இதையொட்டி ப.சிதம்பரம் வீட்டிற்கு இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சமீபத்தில் ராஜீவ் காந்தி கொலையாளிகள் 7 பேர்களை விடுவிக்க தமிழக அரசு எடுத்த முடிவிற்கு நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த இந்த மிரட்டல் கடிதம் விடுக்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி