செய்திகள்,திரையுலகம் அமீர்கானுடன் இணையும் மோகன்லால், சூர்யா!…

அமீர்கானுடன் இணையும் மோகன்லால், சூர்யா!…

அமீர்கானுடன் இணையும் மோகன்லால், சூர்யா!… post thumbnail image
மும்பை:-பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் இந்தி தொலைக்காட்சி ஒன்றில் சத்யமேவ ஜெயதே என்ற டாக் ஷோ நிகழ்ச்சியை வெகு சிறப்பாக செய்தார். இதன் இரண்டாம் பாகம் வரும் மார்ச் இரண்டாம் தேதி முதல் தொடங்குகிறது. பல முக்கிய சமூக பிரச்சனைகளை இந்த தொடரில் அலசி ஆராய்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த தொலைக்காட்சி தொடர் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளிவர உள்ளது. தமிழ், மலையாளம், பெங்காலி, மற்றும் மராத்தி மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு அந்தந்த மொழிகளில் பிரபலமாக இருப்பவர்கள் இந்த நிகழ்ச்சியை பிரபலப்படுத்த உள்ளனர்.மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், மலையாள டப் நிகழ்ச்சியை பிரபலப்படுத்த உள்ளார். அதேபோல இந்த நிகழ்ச்சியை சூர்யாவும் பிரபலப்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் நீங்கள் நினைப்பதுபோல் தமிழுக்கு அல்ல. தெலுங்கு மொழியில் டப் செய்யப்படும்.

இந்த நிகழ்ச்சியை புரமோஷன் செய்ய சூர்யாவுக்கு ஒரு பெரும் தொகை கொடுக்கப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சிங்கம் 2 தெலுங்கில் சக்கை போடு போட்டதில் இருந்து சூர்யாவுக்கு தெலுங்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ் மொழிக்கு இந்த நிகழ்ச்சியை பிரபலப்படுத்த இரண்டு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி