செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு ஸ்ரீசாந்த் ஒரு அப்பாவி!… சூதாட்ட நடிகர் தகவல்…

ஸ்ரீசாந்த் ஒரு அப்பாவி!… சூதாட்ட நடிகர் தகவல்…

ஸ்ரீசாந்த் ஒரு அப்பாவி!… சூதாட்ட நடிகர் தகவல்… post thumbnail image
மும்பை:-ஆறாவது பிரிமியர் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட, இந்திய அணியின் ராஜஸ்தான் வீரர் ஸ்ரீசாந்த், அன்கித் சவானுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. தவிர, சென்னை அணியின் ‘கவுரவ’ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன், பாலிவுட் நடிகர் வின்டூ தாராசிங் சிக்கினர்.இதனிடையே, ஆங்கில ‘டிவி’ சானல் ஒன்று நடத்திய புலனாய்வு நடவடிக்கையில், பிரிமியர் தொடர் சூதாட்டம், பெட்டிங் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்களை, தாராசிங் தெரிவித்துள்ளார்.புலனாய்வு செய்தியில் தாராசிங் கூறியது:

இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) தலைவர் சீனிவாசன், பிரிமியர் தொடரின் முன்னாள் தலைவர் லலித் மோடி, இடையிலான மோதல் காரணமாகத்தான், பிரிமியர் தொடர் சூதாட்டம் வெளியே வந்தது.இதில் லலித் மோடிக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் சரத்பவார் செயல்படுகிறார். சீனிவாசனை வெளியேற்றிவிட துடிக்கிறார் லலித் மோடி. இவரது மருமகன் என்பதால் தான், குருநாத்தை லலித் மோடி சிக்கவைத்தார். ஏனெனில், குருநாத்துக்கு எதிரான ஒவ்வொரு ஆதாரங்களும், சீனிவாசனுக்கு நெருக்கடி தரும் என, இவருக்குத் தெரியும்.

ஸ்ரீசாந்த்தை பொறுத்தவரை ‘பிக்சிங்கில்’ தொடர்பே கிடையாது. இவர் ஒரு அப்பாவி. அதாவது ஒரு ஓவரில் நான் 14 ரன்கள் தருவதாக சம்மதிக்கிறேன்.முதல் 2 பந்தில் 2 பவுண்டரி அடித்தால், மீதமுள்ள 6 ரன்கள் எடுப்பது எளிதாகி விடும். ஆனால், ஸ்ரீசாந்த் முதல் 4 பந்தில் 6 ரன்கள் தான் கொடுத்தார். அடுத்த இரு பந்தில் 8 ரன்கள் கொடுக்க என்ன உத்தரவாதம் உள்ளது.உண்மையில், ஸ்ரீசாந்துக்கு எதிராக அமைந்த அனைத்து செய்திகளும், அவரை குற்றவாளியாக மாற்றிவிட்டன. இவை எல்லாம் முட்டாள்தனமானது. ஸ்ரீசாந்த் 100 சதவீதம் நிரபராதி.இவ்வாறு வின்டூ தாராசிங் கூறினார்.

பிரிமியர் தொடர் குறித்து வின்டூ தாராசிங் கூறுகையில்,‘‘ பிரிமியர் தொடர் லலித் மோடியின் மூளையில் உதித்த ‘ஐடியா’. இதற்கு சம்மதம் தெரிவித்த சரத்பவார், வேறு யாரும் குறுக்கிட மாட்டார்கள் என, உறுதி தந்தார். தவிர, லலித் மோடிக்கு நான்கு அணிகளில் பங்குள்ளது. இவையெல்லாம் வெளியே தெரிந்ததும், லலித் மோடியை பாதுகாப்பாக லண்டனுக்கு அனுப்பிவிட்டார் சரத் பவார். உண்மையில் இவர் மிகப்பெரிய மனிதர். இவரை எதிர்த்து வாழ முடியாது. நீங்கள் எதிர்த்து செயல்பட்டால், உங்கள் ‘டிவி’ சானலை முடிவிடுவார்,’’ என்றார்.

வின்டூ கூறுகையில்,‘‘‘பெங்களூரு அணி உரிமையாளர் விஜய்மல்லையாவுக்கு ‘பெட்டிங்கில்’ தொடர்புள்ளது. இதன் மூலம் இதுவரை ரூ. 100 முதல் 200 கோடி வரை சம்பாதித்துள்ளார். தவிர, பாலிவுட் நட்சத்திரங்களும் ‘பெட்டிங்’ செய்வர். ஆனால், ‘பிக்சிங்’ செய்வது கிடையாது,’’என்றார்.போலீஸ் விசாரணை குறித்து வின்டூ தாராசிங் கூறுகையில்,‘‘ நாங்கள் எதுவும் செய்யவில்லை என, எங்களுக்குத் தெரியும். என்ன செய்ய, சீனிவாசன் சிக்கும் வரை, உங்களை விடக் கூடாது என, சரத் பவார் எங்களுக்கு நெருக்கடி தருகிறார். பேசாமல், 10 முதல் 15 நாட்கள் அல்லது ஒரு மாதம் எங்கள் கஸ்டடியில் இருங்கள்,’ என, போலீசார் கூறியதாக தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி