செய்திகள்,திரையுலகம் கள்ளக்காதல் விவகாரத்தால் நடிகையை விவாகரத்து செய்யும் டைரக்டர்…

கள்ளக்காதல் விவகாரத்தால் நடிகையை விவாகரத்து செய்யும் டைரக்டர்…

கள்ளக்காதல் விவகாரத்தால் நடிகையை விவாகரத்து செய்யும் டைரக்டர்… post thumbnail image
திருவனந்தபுரம்:-மலையாளம், இந்தி சினிமா உலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் பிரியதர்ஷன். 1984ம் ஆண்டு மோகன்லால் நடித்த ‘பூச்சக்கொரு மூக்குத்தி‘ என்ற படத்தை இவர் முதன்முதலாக இயக்கினார். பிறகு போயிங் போயிங், செப்பு, சித்ரம், வந்தனம், கிலுக்கம் உட்பட 40க்கும் மேற்பட்ட மலையாள படங்களை இயக்கினார். இவர் இயக்கிய பெரும்பாலான மலையாள படங்கள் சூப்பர் ஹிட்டுகளாக ஓடின. தொடர்ந்து இந்தியில் கால் பதித்த இவர் அங்கும் 15க்கும் மேற்பட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.

தமிழிலும் பல படங்கள் இயக்கியுள்ள இவர் இயக்கிய ‘காஞ்சிவரம்‘ படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. பிரியதர்ஷனும், மலையாள முன்னாள் நடிகை லிசியும் 1990ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தமிழில் விக்ரம், ஆனந்த புன்னகை, மனசுக்குள் மத்தாப்பூ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். முதலில் லிசியின் காதலை பிரியதர்ஷன் ஏற்கவில்லை. இதனால், லிசி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவரை பிரியதர்ஷன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லிசிக்கு தொழிலதிபர் ஒருவருடன் நெருக்கம் ஏற்பட்டதாகவும், அந்த விவரம் பிரியதர்ஷனுக்கு தெரிந்ததால் பிரச்னை வெடித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, இருவரும் விவாகரத்து செய்ய தீர்மானித்து, குடும்ப நல நீதிமன்றத்தில் விரைவில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக அவர்களுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி