செய்திகள் அழும் கன்னி மேரியின் சிலையால் பரபரப்பு…

அழும் கன்னி மேரியின் சிலையால் பரபரப்பு…

அழும் கன்னி மேரியின் சிலையால் பரபரப்பு… post thumbnail image
இஸ்ரேல்:-இஸ்ரேல் நாட்டில் உள்ள டர்ஷிஹா என்ற நகரத்தில் வசிக்கும் ஒசாமா கெளரி குடும்பத்தினர் வீட்டில் உள்ள கன்னிமேரி சிலை கடந்த ஒரு வாரமாக கண்ணீர் விட்டு அழுததாகவும், ஒசாமா கெளரியிடம் பேசுவதாகவும் காட்டுத்தீ போல செய்தி பரவி வருகிறது.

அந்த சிலையில் அடிக்கடி எண்ணெய் படர்வதாகவும், கண்களில் இருந்து வெளிப்பட்ட கண்ணீர் கன்னங்களில் துளித்துளியாக தெரிவதாகவும் கூறுகின்றனர். இந்த செய்தி பரவ ஆரம்பித்தவுடன் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், அந்த கன்னி மேரியின் சிலையை பார்க்க நூற்றுக்கணக்கில் திரண்டு வந்துகொண்டு இருக்கின்றனர்.

மேலும் அந்த வீட்டில் வசிக்கும் ஒசாமா கெளரியிடம் அந்த கன்னி மேரி சிலை பேசியதாகவும், எதற்கும் பயப்பட வேண்டாம், தான் துணைக்கு இருப்பதாக கூறியதாகவும் கூறுகின்றனர். கன்னிமேரியின் சிலை முன்பு நின்று குடும்பம் குடும்பமாக பக்திபாடல்களை பாடி வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி