செய்திகள் மாமியாரை கடத்திய மருமகன்…

மாமியாரை கடத்திய மருமகன்…

மாமியாரை கடத்திய மருமகன்… post thumbnail image
பெருங்குடி:-பெருங்குடி திருவள்ளுவர் நகர் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது மனைவி அபிராமி (55). இவர்களது மகள் விஜயாவை திண்டிவனத்தை சேர்ந்த ரமேஷ் (33) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் விஜயாவுக்கும் ரமேஷுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவதும் கோபத்தில் பெற்றோர் வீட்டுக்கு விஜயா வந்து விடுவதும் வழக்கம். பெற்றோர், அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைப்பார்கள்.கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நடந்த தகராறில் கோபத்தில் வீட்டுக்கு வந்து விட்டார் விஜயா. அவரை அழைப்பதற்காக நேற்று முன்தினம் இரவு ரமேஷ் தனது நண்பர்களுடன் மாமியார் வீட்டுக்கு வந்தார். அங்கு விஜயா இல்லை. மனைவி எங்கே என்று ரமேஷ் கேட்க, எந்த தகவலையும் அபிராமி கூறவில்லை. இதனால் தகாத வார்த்தையால் ரமேஷ் பேச வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.ஆத்திரம் அடைந்த ரமேஷ் மற்றும் அவரது நண்பர்கள், அபிராமியை குண்டுக்கட்டாக தூக்கி காரில் போட்டனர். கார் மின்னல் வேகத்தில் பறந்தது. இதை பார்த்ததும் அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். உடனே அனைத்து காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

தாம்பரம் இரும்புலியூர் செக்போஸ்ட்டை கடந்து கார் சென்றபோது விஜயா, வெளியே கையை நீட்டி சத்தம் போட்டுள்ளார். இதை செக்போஸ்ட்டில் இருந்த போலீசார் பார்த்து காரை மடக்கினர். பின்னர் துரைப்பாக்கம் போலீசில் அவர்களை ஒப்படைத்தனர்.போலீசார் வழக்கு பதிந்து 3 பேரையும் கைது செய்து அபிராமியை மீட்டனர். காரை பறிமுதல் செய்தனர். கைதானவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி