செய்திகள்,திரையுலகம் சிம்புவை அலட்சியப்படுத்திய ஹன்சிகா…

சிம்புவை அலட்சியப்படுத்திய ஹன்சிகா…

சிம்புவை அலட்சியப்படுத்திய ஹன்சிகா… post thumbnail image
சென்னை:-நடிகைகளுடனான ஆர்யாவின் அந்தரங்க லீலைகள் அனைத்தையும் அறிந்தவர் சிம்பு. அதனாலோ என்னவோ, தான் காதலித்த ஹன்சிகா சேட்டை படத்தில் ஆர்யா உடன் சேர்ந்து நடித்தபோது அநியாயத்துக்கு டென்ஷனில் இருந்தார் சிம்பு.சேட்டை படப்பிடிப்பின்போது ஹன்சிகாவின் கேரவான் கதவு அரைமணிநேரத்துக்கு மேல் மூடி இருந்தால், அதைக் கேள்விப்பட்டதும் மூட்அவுட்டாகிவிடுவார் சிம்பு.

சேட்டை படப்பிடிப்பு முடியும் வரை ஆர்யாவிடமிருந்து ஹன்சிகாவை சேப்ட்டி பண்ணுவதற்காக படாதபாடுபட்ட சிம்பு, இனி ஆர்யா உடன் நடிக்கக் கூடாது என்று ஹன்சிகாவிடம் கண்டிஷன் போட்டிருக்கிறார். காதல் மயக்கத்தில் இருந்த ஹன்சியும் அதற்கு தலையாட்டி வைத்திருக்கிறார். இது தெரியாமல் மீகாமன் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகாவை அணுகி இருக்கிறார்கள். ஆர்யா உடன் நடிக்க மாட்டேன் என்று சிம்புவிடம் சத்தியம் செய்ததால் மீகாமன் படவாய்ப்பு தேடி வந்தபோது, டேட் இல்லை என்று கை விரித்திருக்கிறார் ஹன்சிகா. நீங்க குடுக்கிற டேட்டில் ஷூட்டிங் வச்சுக்கிறோம் என்று மீண்டும் அணுகி இருக்கிறார்கள். இந்தமுறை பெரிய தொகையை சம்பளமாகக் கேட்டிருக்கிறார் ஹன்சிகா. அவ்வளவு பெரிய சம்பளத்தைக் கேட்டால் திரும்பிப்பார்க்காமல் ஓடிப்போய்விடுவார்கள் என்று நினைத்திருக்கிறார்.

அவர் நினைப்புக்கு மாறாக, அவர் கேட்ட சம்பளத்தையும் தருவதாகச் சொல்லிவிட்டனர். இப்போது என்ன சொல்லி மீகாமன் படத்தை தவிர்ப்பது என்று தெரியாமல் தர்மசங்கடத்தில் தவிக்க ஆரம்பித்தார் ஹன்சிகா. இதற்கிடையில், நயன்தாரா உடன் நடிக்கக் கூடாது என்று ஹன்சிகா சொன்னதை மீறி, நயன்தாராவை தன் படத்தில் கமிட் பண்ணினார் சிம்பு. அதனால் சிம்பு ஹன்சிகா உறவில் விரிசல் ஏற்பட்டு, ஏறக்குறைய இருவரும் பிரிந்துவிட்டநிலையில்,மீகாமன் பட வாய்ப்பை தற்போது ஏற்றுக் கொண்டிருக்கிறார் ஹன்சிகா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி