செய்திகள் பெண்ணின் தலை மீது விழுந்த முள்ளம்பன்றி…

பெண்ணின் தலை மீது விழுந்த முள்ளம்பன்றி…

பெண்ணின் தலை மீது விழுந்த முள்ளம்பன்றி… post thumbnail image
பிரேசில்:-பிரேசிலின் ரியோடி ஜெனிரோ நகரை சேர்ந்தவர் சான்ட்ரா நபுகோ,வயது.52 சான்ட்ரா வழக்கம்போல அவரது நாயுடன் கடந்த வாரம் சாலையில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார்.

அப்போது நடைபாதையில் இருந்த விளக்கு கம்பத்தின் மீதிருந்த முள்ளம்பன்றி ஒன்று திடீரென சான்ட்ரா மீது விழுந்தது.உடலெங்கும் முட்களை உடைய முள்ளம்பன்றி உயரத்தில் இருந்து விழுந்ததில், சான்ட்ராவின் தலையில் சுமார் 200 முட்கள் குத்தின. வலியால் அலறி துடித்த சான்ட்ராவை பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.அவரது தலையில் குத்திய முட்களை மருத்துவர்கள் இடுக்கி போன்ற உபகரணத்தால் ஒவ்வொன்றாக எடுத்தனர்.

இதுகுறித்து சான்ட்ரா குறிப்பிடுகையில், முள்ளம்பன்றி என் தலையின் மீது விழுந்த போது கடுமையாக வலித்தது.முதியவர்கள் மீதோ, குழந்தைகள் மீதோ விழுந்திருந்தால் அவர்கள் கண்டிப்பாக இறந்து போயிருப்பார்கள், நான் வலிமையாக இருந்ததால் உயிர் பிழைத்தேன் என்று தெரிவித்துள்ளார்.முள்ளம்பன்றிகள் மீது சுமார் 30,000 முற்கால வரை இருக்குமென தெரிவிக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி