செய்திகள் கருமுட்டையை விற்க மனைவியை கட்டாயப்படுத்தும் கணவன்மார்கள் …

கருமுட்டையை விற்க மனைவியை கட்டாயப்படுத்தும் கணவன்மார்கள் …

கருமுட்டையை  விற்க மனைவியை கட்டாயப்படுத்தும் கணவன்மார்கள் … post thumbnail image

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் “நவராஜ்” வயது 31 இவரது மனைவி “சகுந்தலா” வயது 27 இருவரும் விசைத்தறி பட்டறை தொழிலாளிகள். குடிப்பழக்கத்திற்கு அடிமையான நவராஜ் அடிக்கடி தனது மனைவி சகுந்தலாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு குடிபோதையில் தனது மனைவி சகுந்தலாவை அரிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்து ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதுகுறித்து, குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போதுதான் தனது மனைவி சகுந்தலாவை கருமுட்டை விற்க சொல்லி வற்புறுத்தியதாகவும், அதற்கு மறுத்ததால்தான் சகுந்தலாவை நவராஜ் வெட்டியதாகவும் தெரிய வந்தது. இச்சம்பவத்தில் விசாரணைக்கு சென்ற நவராஜ் விஷம் குடித்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரித்தபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சேலம், ஈரோடு, சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் கருத்தரிப்பு மைய மருத்துவமனைகளுக்கு வரும் குழந்தை இல்லாத பெண்ணின் கருப்பையை சோதனை செய்யும் போது அவர்களில் பெரும்பாலானவர்களின் கருப்பையின் கருமுட்டை வலுவிழந்து காணப்படுவதை டாக்டர்கள் கண்டறிகின்றனர்.

இதுபோன்ற பெண்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்னும்போது அதற்கு மாற்று ஏற்பாடாக வேறு பெண்ணின் கருமுட்டையை வாங்கி அதை சம்மந்தப்பட்ட பெண்ணின் கருப்பையில் வைத்து கருவை வளர்க்கின்றனர். இதுபோன்று கருமுட்டையை விற்பனை செய்வதற்கென்றே ஏஜெண்டுகள் பலர் செயல்பட்டு வருவது தற்போது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

விசைத்தறி தொழிலில் ஈடுபடும் பெண் தொழிலாளர்களை நாடும் ஏஜெண்டுகள் கருமுட்டை விற்பனை செய்தால் 25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையிலும் கிடைக்கும் என ஆசைவார்த்தைக்கூறி சம்மந்தப்பட்ட கருத்தரிப்பு மையங்களுக்கு அழைத்து செல்கின்றனர். இதுவரை இரண்டு முதல் மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஈரோடு சுற்றுப்பகுதியை சேர்ந்த பல பெண்கள் கருமுட்டையை விற்று சம்பாதிக்கின்றனர். அதேநேரத்தில் கருமுட்டை விற்க மறுக்கும் பெண்களை கணவன் துன்புறுத்துவதால் குடும்ப உறவுகள் சீரழிகின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி