செய்திகள் 50 மணி நேரம் டிரம்ஸ் வாசித்து சாதனை படைத்த மாணவர்…

50 மணி நேரம் டிரம்ஸ் வாசித்து சாதனை படைத்த மாணவர்…

50 மணி நேரம் டிரம்ஸ் வாசித்து சாதனை படைத்த மாணவர்… post thumbnail image
சென்னை:-சென்னையிலுள்ள லியோ மெட்ரிக் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவனான டிரம்ஸ் குமரன், தனது பள்ளியில் அமைக்கப்பட்ட மேடையில் 50 மணி நேரம் டிரம்ஸ் வாசித்து சாதனை படைத்தான்.

கிட்டத்தட்ட 700-க்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கை ரெய்ஹனாவும் கலந்து கொண்டார். பிரபல தொழிலதிபரான டயமண்ட் குருப்ஸ் பி. மோகன்ராஜும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்.ஜனவரி 3-ம் தேதி டிரம்ஸ் வாசிக்கத் தொடங்கிய மாணவன், தொடர்ந்து 50 மணி நேரம் வாசித்து ஆசிய சாதனை புத்தகத்திலும், இந்திய சாதனை புத்தகத்திலும் மற்றும் தமிழக சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்தார்.

17 வயதான இம்மாணவனின் சாதனை முயற்சியை அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்.தனது அடுத்த இலக்காக தொடர்ந்து 125 மணி நேரம் டிரம்ஸ் வாசித்து சாதனை புத்தகத்தில் இடம்பிடிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி