அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் ஆம் ஆத்மி கட்சியில் சேர தமிழக இளைஞர்கள் வாய்ப்பு…

ஆம் ஆத்மி கட்சியில் சேர தமிழக இளைஞர்கள் வாய்ப்பு…

ஆம் ஆத்மி கட்சியில் சேர தமிழக இளைஞர்கள் வாய்ப்பு… post thumbnail image

ஆம் ஆத்மி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் லெனின் கூறியதாவது,தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், கட்சிக்கான கட்டமைப்பு வசதிகளை உடனடியாக செய்வதற்கு கெஜ்ரிவால் மற்றும் முக்கிய தலைவர்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள். அமைப்பு ரீதியாக பார்க்கும்போது மாநில செயற்குழு உள்ளது. மாநில செயற்குழு மாவட்ட அளவிலான குழுக்களை தேர்வு செய்யும். இப்படி பஞ்சாயத்து குழுக்கள் வரை தேர்வு செய்யப்படுவர். 2012-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி கட்சி தொடங்கப்பட்ட நாள் முதல் இந்த பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு 6,400 ஆக இருந்த உறுப்பினர்கள் எண்ணிக்கை டெல்லி தேர்தல் முடிவுக்கு பின் 30 ஆயிரமாக உயர்ந்துள்ளது.  AAPTN என டைப் செய்து NAME மற்றும் DISTRICT டைப் செய்து 56767 என்ற எண்ணிற்கு என sms அனுப்பி உறுப்பினராகலாம்.

கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பெரும்பாலும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களே எங்கள் கட்சியில் சேர அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அரசியலில் இதுவரை ஈடுபடாமல், நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் இருக்கும் சாதாரண குடிமகன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி