செய்திகள்,முதன்மை செய்திகள் பல்லி விழுந்த உணவை சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மயக்கம்…

பல்லி விழுந்த உணவை சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மயக்கம்…

பல்லி விழுந்த உணவை சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மயக்கம்… post thumbnail image
குத்தாலம் அருகே உள்ள வில்லியநல்லூரில் தனியார் ரப்பர் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இன்று காலை அந்த கம்பெனியில் 53 தொழிலாளர்கள் வேலை பார்த்தனர். அவர்களுக்கு அப்பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் இருந்து உணவு வாங்கி வழங்கப்பட்டது.

அதனை சாப்பிட்ட 53 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவர்கள் சாப்பிட்ட சாம்பாரில் பல்லி விழுந்ததால் வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி